- பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
- வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை
- புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்
- தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை
- காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்
- எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்
- படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு
- வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா
- மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்
- மகானாய் இருக்கவேண்டாம் ஒரு தாய்க்கு நல்ல மகனாய் இரு
- குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள் குணவானாவாய்
- இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்
Saturday, August 18, 2007
எனது பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment